கனேடிய விமானங்களிலிலும் ரயில்களிலிலும் பயணிக்க கனேடிய அரசாங்கம் விரைவில் புதிய விதிமுறைகளை அமுல்படுத்தவதாக அறிவித்துள்ளது.
கனடா அரசாங்கம் மிக விரைவில் விமான நிலையங்களில் இருந்தும், ரயில்களிலும் பயணிக்கும் யாராக இருப்பினும் கட்டாயம் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்கவேண்டும்.
இந்த புதிய நடவடிக்கைகளின் முதற்கட்டம் வரும் அக்டோபர் 30-ஆம் திகதி முதல் தொடங்கும் எனறு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து பயணிகளும் கூட்டாட்சி-ஒழுங்குபடுத்தப்பட்ட போக்குவரத்து முறைகளை பயன்படுத்த கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்.
இது, கனேடிய விமான நிலையங்களிலிருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள், விஐஏ ரயில் மற்றும் ராக்கி மவுண்டனீர் ரயில்களில் ரயில் பயணிகள் மற்றும் 24 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்ட பயணங்களில் பயணிக்கும் கப்பல் பயணிகளுக்கும் பொருந்தும்.




















