அமெரிக்காவில் மீண்டும் ஒரு மகாத்மா காந்தியின் (Mahatma Gandhi) சிலை நேற்று நிறுவப்பட்டது.
இந்த சிலை அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள மிசுசிப்பி என்னும் மாகாணத்தின் கிளார்க்ஸ்டேல் என்ற நகரத்தில் நிறுவப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கிளார்க்ஸ்டேல் நகரத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி வுல்லாகன்டி என்பவர் ‘பிப்பிள் ஷோர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
கிளார்க்ஸ்டேல் நகரம் கடந்த 4 வருடங்களாக கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்த நிலையில் இந்திய வம்சாவளியான முரளியின் நிறுவனம் வாயிலாக அங்கு ஏராளமான அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. இதனால் கடும் நெருக்கடியில் இருந்து குறித்த நகரம் மீண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய கலாசார கவுன்சில் சார்பில், மகாத்மா காந்தியின் மார்பளவு வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டது.