நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.
பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி, இவர்கள் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
17 மாவட்டங்களைச் சேர்ந்த 62 ஆயிரத்து 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 18 வீடுகள் முற்றாகவும் 960 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் மண் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மண்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளிலிருந்து வௌியேறாதவர்கள், பொலிஸ் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக அதிகாரத்தை பயன்படுத்தி வௌியேற்றப்படுவார்கள் என இடர் முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.