அண்மையில் கடற்படையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேரும் சற்று முன்னர் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த 23 பேருமே இவ்வாறு சிறைச்சாலை அதிகாரிகளால் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே இன்று இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்