இலங்கை முகாமையாளர் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மிகவும் தீவிரமாக தேடப்படும் குற்றவாளி திங்கட்கிழமை கைது செய்யப்பட்டதாக பஞ்சாப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சந்தேக நபர் பில்லி எனப்படும் இம்தியாஸ் என அடையாளம் காணப்பட்டதுடன், அவர் மறைந்த பிரியந்த குமாரவை சித்திரவதை செய்து அவரது உடலை அவமானப்படுத்தியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராவல்பிண்டிக்கு செல்லும் பேருந்தில் வைத்து குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டார் என்று பஞ்சாப் பொலிஸார் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, கடந்த 12 மணி நேரத்தில், பஞ்சாப் பொலிசார் மேலும் ஏழு முக்கிய நபர்களை கைது செய்துள்ளனர்.
இதில் இலங்கை மேலாளர் ஒருவரை படுகொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மற்றும் வன்முறை மற்றும் தூண்டுதலின் குற்றவாளிகளில் ஒருவர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.