ஆப்கானிஸ்தானின் முன்னாள் படை வீரர்களை குறிவைத்து கொல்வதை நிறுத்துமாறு தலிபான்களை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் கண்டித்துள்ளன.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலிபான்களின் அதிகாரம் கொடி கட்டிப்பறக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி முதல் அக்டோபர் 31 ம் திகதி வரை தங்களிடம் சரணடைந்த ஆப்கான் முன்னாள் படையினர் 47 பேரை தலிபான்கள் கொன்றுள்ளதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் கண்டித்துள்ளதுடன், 22 நாடுகள் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன. அதில் தலிபான்கள் அரசு, முந்தைய அரசுக்கோ அல்லது அதன் பாதுகாப்பு படை வீரர்களுக்கோ தீங்கு விளைவிக்கக்கூடாது என்ற உறுதிமொழியை தலிபான்கள் அரசு நிர்வாகம் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டறிக்கையில் அமெரிக்கா தலைமையில் இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் 19 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.