பாகிஸ்தானின் சியால்கொட்டில் இலங்கையரை படுகொலை செய்த நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கொலையாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மனிதாபிமானமற்ற வகையில் பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் பாதகச்செயலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை வழக்கு நீண்டு கொண்டு செல்வதற்கு ஜனாதிபதி இடமளிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் இலங்கை மக்கள் அதற்கான எதிர்ப்பை வெளியிடக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மக்கள் பொறுமையுடன் இருக்கின்றார்கள் எனவும் அது பாராட்டுக்குரியது எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.