ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு பேராபத்து காத்திருப்பதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக இலங்கையின் மீது ஏதேனும் நடைமுறைச் சாத்தியப்பாடுடைய நடவடிக்கைகள் எடுக்க கூடும் எனவும், அதனை எதிர்நோக்க அரசாங்கம் ஆயத்தமாக வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து தாம் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு நாடாளுமன்றில் எடுத்துரைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் சர்வதேச ரீதியில் பகைமையை சம்பாதித்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு தேர்தலின் போது மஹிந்தவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்ல முயற்சிப்பதாக எம்மீது குற்றம் சுமத்தினாலும் நாமே அவரை காப்பாற்றினோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாம் சர்வதேசத்துடன் சுமூகமான உறவுகளை பேணியதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது பிரச்சினைகள் எழவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போர் வென்றெடுக்கப்பட்ட போது மண்டேலாவின் வழியை தெரிவு செய்யாது மஹிந்த முகாபேயின் வழியில் பயணித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கமும் அதே பாதையை பின்பற்றுவதாக ஊடக சந்திப்பொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.