ஓமிக்ரோன் பரவல் காரணமாக நெதர்லாந்தில் கிறிஸ்துமஸ் தினத்தில் முதல் ஊரடங்கை அறிவித்து இருக்கிறது. ஓமிக்ரோன் வைரஸ் ஆனது தென்னாபிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது.
இந்த வைரஸ் ஆனது தற்போது 80 நாடுகளுக்கும் மேல் பரவிக்கொண்டு இருக்கிறது. இதனால், பல நாடுகள் கட்டுப்பாடு விதிகளை அறிவிக்க ஐரோப்பா நாட்டில் ஆபத்தான நாடாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், நெதர்லாந்த் நாட்டிலும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.
இதனால், ஒமைக்ரான் அச்சத்தால் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் சேருவதை தடுக்கும் வகையில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் ஜனவரி 14 வரை மூடப்படும் என்றும், பள்ளிகள் குறைந்தபட்சம் ஜனவரி 9-ம் தேதி வரை மூடப்படும் என்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.




















