நாட்டின் அநேக பகுதிகளில் குளிரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இரவு நேரத்திலும், அதிகாலையிலும் இவ்வாறு குளிரான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் சீரான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை வேளையில் பூம்பனி படியும் சாத்தியமுண்டு என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.