கடந்த வருடம் மாத்திரம் 120,000 இலங்கையர்கள் வேலை வாய்ப்பிற்காக நாட்டை விட்டு வெளியேறி வேலை வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் கட்டாருக்கு 30,000 பேரும், சவூதி அரேபியாவுக்கு 27,000 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 20,000 பேரும், தென் கொரியாவுக்கு 1,400 பேரும், சிங்கப்பூரில் 1,100 பேரும், சைப்ரஸில் 1,600 பேரும், ஜப்பானில் 800 பேரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.



















