தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில், இலங்கை மின்சார சபைக்கு ஆயிரத்து 500 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் அன்ட்ரூ நவமணி இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
எனினும் எரிபொருள் இருப்பு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விரைவில் எரிபொருள் இருப்பு கிடைத்தால் மின்சார சபைக்கு தடையில்லா மின்சாரம் வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



















