• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

ஜனாதிபதி தொடர்பில் பரபரப்பான தகவலை வெளியிட்ட பெண் அரசியல்வாதி

Editor1 by Editor1
January 19, 2022
in இலங்கைச் செய்திகள்
0
ஜனாதிபதி தொடர்பில் பரபரப்பான தகவலை வெளியிட்ட பெண் அரசியல்வாதி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டுமக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டியெழுப்பப்பட்ட ‘ராஜபக்ஷ’ என்ற பெயரை, அரசியல் ரீதியில் எவ்வித முன்னனுபவமுமின்றி ஆட்சிபீடமேறிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முழுமையாகச் சிதைத்திருக்கின்றார்.

இவ்வாறானதொரு பின்னணியில் நாட்டை மீளக்கட்டியெழுப்பக்கூடிய ஒரேயொரு மாற்றுத்தெரிவாக இருக்கின்ற சஜித் பிரேமதாஸவின் பக்கம் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் கவனத்தைக் குவிக்க ஆரம்பித்திருக்கின்றன என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இலங்கையில் உணவு மற்றும் மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று கனடா எச்சரித்துள்ள நிலையில், மக்கள் இயலுமானவரையில் முன்கூட்டியே பொருட்களைக் கொள்வனவுசெய்து சேமித்துவைப்பது உகந்ததாகும் என்று தெரிவித்துள்ள அவர், இத்தகைய நெருக்கடிகளிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்புவதை முன்னிறுத்திய புதியதொரு ஆட்சிமாற்றத்திற்குத் தயாராகுமாறும் மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியவதாவது,

தற்போதைய அரசாங்கத்தினால் நாட்டின் நிர்வாகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லமுடியாது என்பது அண்மையகால நிலைவரங்களின் ஊடாக நன்கு தெளிவாகியிருக்கின்றது. பால்மா, எரிவாயு, எரிபொருள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குத் தற்போது மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றார்கள்.

இந்நிலை தொடருமானால், எதிர்வரும் மார்ச் மாதமளவில் அத்தியாவசியப்பொருட்களுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் மிகமோசமாகப் பாதிப்படைவார்கள். வரலாற்றைப் பொறுத்தமட்டில் எமது நாடு விவசாயத்தில் தன்னிறைவடைந்திருந்ததன் காரணமாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்கள் பசியோடு இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படவில்லை. ஆனால் தற்போதைய அரசாங்கத்தின் தூரநோக்கு சிந்தனையற்ற தீர்மானங்கள் அதனை முற்றாக மாற்றியமைத்திருக்கின்றது.

எந்தவொரு விஞ்ஞானபூர்வ அடிப்படைகளுமின்றி இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட சடுதியான தீர்மானத்தினால் நாட்டின் விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிப்படைந்து, தேசிய உற்பத்தி குறிப்பிடத்தக்களவால் வீழ்ச்சியடைந்திருக்கின்றது.

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட செயற்திட்டங்களைக் கடந்த இருவருடங்களில் செயற்படுத்தமுடியாவிட்டாலும் எதிர்வரும் மூன்று வருடங்களில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் கடந்த காலத்தில் அரிசி மாஃபியா, எரிவாயு மாஃபியா போன்றவற்றின் முன்நிலையில் ஜனாதிபதி மண்டியிட்டதுடன் மாத்திரமன்றி, தேர்தலின்போது வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. அவ்வாறிருக்கையில் அவர் எதிர்வரும் மூன்று வருடங்களில் கடந்தகால வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று எவ்வாறு நம்பமுடியும்? வெளிநாட்டில் எரிபொருள் நிரப்புநிலையத்தில் பணிபுரிந்த ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாக்கினால், அவரிடமிருந்து இதனைத்தான் எதிர்பார்க்கமுடியும்.

நாடளாவிய ரீதியில் மஹிந்த ராஜபக்ஷவினால் கட்டியெழுப்பப்பட்ட ‘ராஜபக்ஷ’ என்ற பெயரை, அரசியல் ரீதியில் எவ்வித முன்னனுபவமும் இல்லாமல் ஆட்சிபீடமேறிய தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முழுமையாகச் சிதைத்திருக்கின்றார். எதிர்வருங்காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரும் ஆட்சிபீடமேறமுடியாத நிலையை அவர் தோற்றுவித்திருக்கின்றார்.

தனக்கெதிரான வழக்குகளிலிருந்து விடுதலை பெறுவதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குகின்றாரே தவிர, நாட்டுமக்கள்மீது அவருக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்று நாம் ஏற்கனவே கூறினோம். இருப்பினும் அவரை ஜனாதிபதியாக்கியதன் விளைவாக நாட்டிற்கு ஏற்பட்ட சேதத்தை இப்போது நாமனைவரும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக எதிர்வருங்காலங்களில் உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்று சில அரசியல்வாதிகள் கூறுகின்றார்கள். ஆனால் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் கனேடியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பில், இலங்கையில் மருந்துப்பொருட்கள், எரிபொருள் மற்றும் மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்பதால் தேவையான பொருட்களை முன்கூட்டியே கொள்வனவு செய்துவைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே எமது நாட்டின் பிரஜைகளும் இயலுமானவரையில் பொருட்களை முன்கூட்டியே கொள்வனவுசெய்து சேமித்துவைக்குமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுக்கமுடியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் எந்தவொரு எதிர்க்கட்சியும் எமது கட்சியைப்போன்று நாட்டிற்கு சேவையாற்றியதில்லை.

அதேவேளை மறுபுறம் அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் ஏனைய சிறிய நாடுகளில் நிகழக்கூடிய அரசியல் ரீதியான நகர்வுகள் மற்றும் ஆட்சிமாற்றங்களை உன்னிப்பாக அவதானித்தவாறு இருக்கும். அந்தவகையில் தற்போது அவற்றின் கவனம் எமது பக்கம் திரும்பியுள்ளது. அண்மையில் ‘ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு’ செயற்திட்டத்தினால் ஈர்க்கப்பட்ட சீனா, அதற்கென இலங்கையிலுள்ள சீனத்தூதுவர் ஊடாகக் குறிப்பிடத்தக்களவிலான நிதியுதவியை வழங்கியிருந்தது.

அதேபோன்று இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் கடனுதவிக்கான கோரிக்கையை முன்வைத்தபோது, அதுகுறித்து இந்திய அதிகாரிகள் சஜித் பிரேமதாஸவுடன் கலந்துரையாடினர். இவற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், நாட்டுமக்கள் மிகக்குறுகிய காலப்பகுதியிலேயே தற்போதைய அரசாங்கம் தொடர்பில் அதிருப்தியடைந்திருக்கும் நிலையில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியையே அனைவரும் அதற்கான மாற்றுத்தெரிவாகக் கருதுகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது.

ஆகவே நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான புதியதொரு ஆட்சிமாற்றத்திற்குத் தயாராகுமாறு நாட்டுமக்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

Previous Post

நடிகை ஸ்ரீதேவியின் மகளை பார்த்துள்ளீர்களா?

Next Post

அழகில் ஜொலிக்க வேண்டுமா?

Editor1

Editor1

Related Posts

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
இலங்கைச் செய்திகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!
இலங்கைச் செய்திகள்

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்
இலங்கைச் செய்திகள்

மகிந்தவின் மற்றுமொரு பாரிய மோசடி அம்பலம்

December 24, 2025
யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்
இலங்கைச் செய்திகள்

யானைக்கு தீவைத்த சம்பவம் – சந்தேநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

December 24, 2025
காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை
இலங்கைச் செய்திகள்

காலி மாநகர சபை வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் அமைதியின்மை

December 24, 2025
வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!
இலங்கைச் செய்திகள்

வவுனியாவில் கஞ்சாசெடி வளர்த்த ஒருவர் கைது!

December 24, 2025
Next Post
அழகில் ஜொலிக்க வேண்டுமா?

அழகில் ஜொலிக்க வேண்டுமா?

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025

Recent News

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

Lizard People: பல்லி முகம் கொண்ட அதிசய குடும்பம்! என்ன காரணம்?

December 25, 2025
2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

2026 இல் அள்ளி கொடுக்கும் புதன் பெயர்ச்சி – இந்த ராசிகள் காட்டில் பண மழை தான்

December 25, 2025
இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்

December 25, 2025
வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

December 25, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy