தெற்காசியா மற்றும் கொமன்வெல்த்துக்கு பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் அகமட் விம்பில்டன் இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை (Jeevan Thiagarajah) சந்தித்தார்.
இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், வடக்கு மாகாணத்திற்கான திட்டங்கள் மற்றும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது விஜயத்தின்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஷாரா ஹில்டன் இணைந்திருந்தார்.



















