வவுனியா, வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மது விருந்தகத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் தீயணைப்பு பிரிவினர் தீயினை அணைக்க கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த தீ விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த பகுதியில் தீப்பிழம்புடன் சத்தம் கேட்டதினை அவதானித்த அயலவர்கள் வெளியில் சென்று பார்வையிட்ட சமயத்தில் குறித்த மதுபானசாலையில் தீப்பற்றி எரிந்ததினை அவதானித்துள்ளனர்.



















