கனடாவில் வெகுவிமர்சையாக தமிழ் மரபுத்திங்கள் இணையவழி பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. குறித்த இணையவழி பெருவிழா 2022 22-01-2022 , சனிக்கிழமை கனேடிய நேரம் பிற்பகல் 3:00 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.
தமிழ் மரபு திங்களுக்கான பிரித்தானிய அரச பேரறிவிப்பினைப் பெறும் நோக்கத்துடன் தமிழ் மரபுத்திங்கள் செயல்பாட்டுக் குழுவினர் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாகவும் நடாத்தி வருகின்றனர்.
குறித்த நிகழ்வில் நேரலையாக கலந்துக்கொள்ளவுள்ளோர் இணைப்பு ஊடாக இணைந்துக்கொள்ளலாம்.
https://us06web.zoom.us/j/81801602741 கனடாவின் பிராம்டன் நகர் வாழ் தமிழ் சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க பிராம்டன் நகரசபையினால் நகரசபையின் பிரதான பூங்காவில் ‘தமிழினப்படுகொலை நினைவுத்தூபி’ அமைப்பதற்கு அனுமதி வழங்கும் தீர்மானம் கடந்த வருடம் ஜனவரி 20ஆம் நாள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.