கொழும்பு நகர மண்டப வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சு கட்டிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனவே குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதியை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.