யாழில் பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர் மானிப்பாய் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது வீட்டிலிருந்து நேற்று (16) மாலை வாள் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மானிப்பாயில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி எரிப்பு உட்பட நான்கு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


















