பாணந்துறை பின்வத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் கழிவு தொட்டியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கழிவு தொட்டியில் இருந்ததாக கூறப்படும் சடலத்தை எடுப்பதற்கு நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்படி, சடலம் நாளை புதன்கிழமை (30) மீட்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















