எரிவாயு விலை தொடர்ந்தும் அதிகரிக்கும் என வெளிவிவகார அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் திட்டம் உள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இம்மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் லிட்ரோ எரிவாயுவின் விலை உயருமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு காட்டாயம் விலை உயர்வு இருக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.



















