இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் படகொன்றில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த போதே இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று கடற்தொழிலாளர்களையும், படகையும் மயிலிட்டி கடற்தொழில் துறைமுகத்திற்குக் கொண்டு வந்த கடற்படையினர், கடற்தொழிலாளர்களை நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.



















