பிரதி சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினர் யாருக்கு வாக்களித்தோம் என வாக்கு சீட்டை மஹிந்தவுக்கு சஜித் பிரேமதாஸ காண்பித்துள்ளார்.
எப்படியிருப்பினும் அந்த நடவடிக்கை முற்றிலும் தவறானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பகீர் பெயரை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பரிந்துரைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு பகிரங்கப்படுத்ததாக நிலையில், சஜித் பிரேமதாஸ அதனை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















