அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்து விட்டு வீட்டிலேயே இருக்குமாறு இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
Is this a joke? time and money wasted as if this appointment was the most pressing matter they had to do in this current crisis and he resigns again 🤦♂️ can everyone @SLparliment resign and stay home please 🙏🏻 #GoHomeGota https://t.co/d8rylAg5e7
— Mahela Jayawardena (@MahelaJay) May 6, 2022
டிவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனை மீண்டும் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து அரசாங்கத்தை விலகுமாறு வலியுறுத்தி மக்கள் தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல இதனை குறிப்பிட்டுள்ளார்.



















