நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தை உடனடியாக நீக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசர காலச் சட்டத்தை அமுல்படுத்தி அமைதியான முறையில் போராட்டத்தை மேற்கொள்வோர் வன்முறையில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும் எனவும் பொதுமக்களின் எதிர்ப்பிற்கு செவிசாய்த்து பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்து சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.