முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ உட்பட 17 பேருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் செய்த முறைப்பாட்டுக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.




















