பொருளாதார நெருக்கடி
நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலை நாட்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ள நிலையில், பாடசாலை நாட்களை மூன்றாக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆசிரியர் மூன்று நாட்களுக்கு மட்டுமே பணிக்கு வருவதற்கான அட்டவணையை வகுக்குமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அத்தகைய செயற்பாடே ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் நிவாரணத்தை அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலினின் கோரிக்கை
இதன்போது, மாணவர்களின் வருகை தொடர்பில், கோரோன காலத்தில் பின்பற்றப்பட்டதைப் போன்ற ஒரு முறையை, நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இல்லையெனில் அதற்குப் பதிலாக எரிபொருள் உட்பட்ட சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதேவேளை, தற்போதுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆசிரியர் சங்கங்களுடன் கலந்துரையாடவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாடசாலைகளின் நாட்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.



















