யாழ்ப்பாணம் – கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக 10 இலட்சம் ரூபா பணத்தை இருவர் வழிப்பறிக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை முன்னெடுப்பு..
குறித்த நபர் பணத்தைப் பூசகரிடம் வாங்கிக்கொண்டு ஆலயத்திலிருந்து வெளியில் வருவதற்கிடையில் அங்கிருந்தவர்கள் இருவர் அப்பணத்தைப் பறித்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பியோடியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.



















