முடி உடைதல் இன்று இளம் வயது பெண்கள் சத்திக்கும் முக்கிய பிரச்சினையாகும்.
முடி உடைதலுக்கு கூந்தல் வறட்சி, கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துதல், பொடுகுத் தொல்லை, உடல் நல பிரச்சனைகள், கூந்தலுக்கு போதிய போஷாக்கு இல்லாமல் இருத்தல் போன்றவை மிக முக்கியமான காரணமாக அமைகிறது.
இதை ஈடு செய்ய என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
முடி உடைவதை தடுக்க க்ரீன் டீ
தேவைப்படும் பொருட்கள்
க்ரீன் டீ – 1/2 தேக்கரண்டி
தேங்காயெண்ணெய் – 1 தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை
இப்பொழுது க்ரீன் டீ தூளை தேங்காயெண்ணெயுடன் கலக்கி பேஸ்ட்டாக்கி கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்ட்டை உச்சந்தலை மற்றும் கூந்தலில் தடவி 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
பிறகு கூந்தலை குளிர்ந்த நீரில் கழுவுங்கள். வாரத்திற்கு ஒரு முறையாவது இதை செய்து வர கூந்தல் உடைவது தடுக்கப்படும்.
வேலை செய்யும் விதம்
க்ரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
இதில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகிறது.
க்ரீன் டீ உச்சந்தலையில் உள்ள தொற்று நோயில் இருந்து உங்களை காப்பாற்ற உதவி செய்யும். இது முடி உதிர்தலை தடுக்கிறது.