நுரைச்சோலை லக்விஜய அனல் மின் நிலைய ஊழியர் ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும், அவர் கடலில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹர்ஷ ஹேமந்த பிரியசாத், என்ற இந்த ஊழியர், மின்சார நிலையத்தில் பணிபுரியும் கனிஷ்ட தொழில்நுட்ப உதவியாளராவார். அவர் மின் உற்பத்தி நிலையத்தின் தளத்தில் இருந்து கடலில் விழுந்து நீரில் மூழ்கியதாக நம்பப்படுகிறது.
இந்த நிலையில் அவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.