பொலனறுவை, வெலிக்கந்தை – கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து சுமார் 50 கைதிகள் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்களில் 35 பேர் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள குழுவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த மோதல் சம்பவத்தின்போது தப்பிச்சென்றவர்களில் சுமார் 35 பேர் மீள சரணடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஏனையோரை தேடும் பணி இடம்பெறுகின்றது. புனர்வாழ்வு முகாமைசூழ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது