காட்டு யானையின் தாக்கியதில் வனவிலங்கு அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் உடவளையில் யானைகள் காப்பகத்தில் கடமையாற்றிய வனவிலங்கு அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இன்று (07-11-2022) காலை வனவிலங்கு உத்தியோகத்தர் காட்டு யானைகளுக்கு உணவளிக்க சென்ற போதே தாக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த அதிகாரி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரி பாணடுவ பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.