கடந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்பும் நோக்கத்தில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்களால் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தற்போது காலிமுகத்திடல் முன்னணி செயற்பாட்டாளர்கள் ஒன்று கூடியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த நினைவு கூறல் நிகழ்வை தடுப்பதற்காக பொலிஸார் காலி முகத்திடல் பகுதியில் திரண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.