கனடாவுக்கு அனுப்புவதாக கூறி சுமார் 99 லட்சம் ரூபாய் பணத்தை சுருட்டிய யாழ்.பண்டத்தரிப்பை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸில் முறைப்பாடு
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு பெண்ணிடம் ஏமாந்துள்ளனர்.
கனடாவிற்கு அனுப்புவதாக கூறி குறித்த பெண்ணால் 55 இலட்சம் மற்றும் 44 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளனர்.
கடந்த சித்திரை மாதம் இவ்வாறு பணம் பெறப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.