மாமனாரால் தாக்கப்பட்டு 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டோலஹேன பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
இது சனிக்கிழமை (டிச.03) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம்
உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் வெள்ளிக்கிழமை (டிச.02) இரவு ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவத்தில் 57 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிசர நீதவான் முன்னிலையில் முன்னிலை படுத்தப்படவுள்ளார்.
மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



















