பொல்ஹாவல- கேகாலை ஏ-19 வீதி மூன்று நாட்களுக்கு மூடப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
பொல்ஹாவல ரயில் கடவையில் மேற்கொள்ளவிருக்கும் திருத்த வேலைகள் காரணமாக, குறித்த வீதி மூடப்படவுள்ளது.
அதன்படி டிசெம்பர் 15ஆம் திகதி காலை 7 மணிமுதல் டிசெம்பர் 18ஆம் திகதி மாலை 6.30 மணிவரையிலும் வீதி மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




















