இலங்கையில் உள்ள உலக முடிவு பகுதியை பார்வையிட விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய, பட்டிப்பொல மற்றும் பொரலந்த ஆகிய பகுதிகளுக்கு இடையில் கேபிள் கார் திட்டத்தை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டத்தை நுவரெலியாவில் 55 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் மேற்கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.