பிரான்ஸில் சமீப நாட்களாக கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஒரே நாளில் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான முழுமையான விபரங்களை பிரான்ஸ் பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பிரான்சில் 30,989 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் 25,084 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவில் 1,447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேவேளை, நேற்றைய தினம் 208 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை பிரான்ஸில் 161,575 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 132,112 பேர் மருத்துவமனைகளிலும், 29,463 பேர் முதியோர் காப்பகங்களிலும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.