கடந்த 2022ஆம் ஆண்டில் சுமார் ஏழு லட்சத்து இருபதாயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளின் பின்னர் இவ்வாறு கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சீனா, ரஸ்யா, இந்தியா மற்றும் மேற்கத்தைய நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
கடந்த 2022ஆம் ஆண்டில் மொத்தமாக 719978 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என்பதுடன் இது கடந்த 2021ஆம் ஆண்டை விடவும் 525483 சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.