பாடசாலை வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் தரம் 1 முதல் 5 வரையான வகுப்பறைகளில் 40 மாணவர்களுக்கு மேல் அனுமதிக்கப்படக் கூடாது என்றும், தரம் 6 முதல் 11 வரையிலான வகுப்பறைகளுக்கு அதிகபட்சமாக 45 மாணவர்களை அனுமதிக்கலாம்.
இதேவேளை பாடசாலை மாணவர் ஆட்சேர்ப்பு நடைமுறையில் திருத்தம் மேற்கொள்ள கல்வி அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
மேலும் தரம் 2 முதல் 11 வரையிலான பாடசாலை மாணவர் ஆட்சேர்ப்பு தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.