இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொடவிற்கும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவலையிற்கும் இடையில் கலந்துரையாடலொன்று நேற்று இடம்பெற்றுள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது
இந்த கலந்துரையாடலில் இரு நாடுகளின் பரஸ்பர உறவை பேணுதல், மீட்டெடுத்தல் மற்றும் ஒத்துழைப்பு வழங்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம்
இலங்கை தூதுவருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் இடையிலான தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த வார இறுதியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமைக்கு முன்னதாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.