துருக்கி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் த்கவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்த 69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலத்தை அவரது மகள் அடையாளம் காட்டியுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது
கலகெதர பகுதியை சேர்ந்த உயிரிழந்த பெண் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கிய இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,000-ஐ கடந்துள்ளது.