உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல் தொடர்பில் விவாதிக்க தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடலை எதிர்வரும் 23 ஆம் திகதி நடத்துவதற்கு நேற்றைய தினம் (16-03-2023) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கைகளை நேற்று முதல் 14 நாட்களுக்குள் வழங்காவிட்டால், அந்தந்த அரசியல் கட்சிகளின் உரிமைகளை ரத்து செய்யவும் தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.