யாழ்.வலி,வடக்கு தையிட்டி பகுதியில் பொதுமக்களின் காணிக்குள் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள விகாரையை சூழவுள்ள மக்களின் காணிகளை விடுவிக்ககோரி இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி இன்று மாலை 3 மணிக்குப் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது.
தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டுவருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதனை எதிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சார்பாக அனைவரும் ஒன்றினைந்து கண்டனப் போராட்டம் ஒன்றினை நடாத்தப்பட்டவுள்ளது.