தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்றைய தினம் (19.05.2023) ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து பிஜி உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.