கோவிட் பெருந்தொற்று இலங்கையை ஆக்கிரமித்த காலத்தில் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்திருந்தன.
இந்நிலையில் வேலையிழந்து இன்றுவரை வேறு தொழில் ஏதும் கிடைக்காமல் காத்திருப்பவர்களும் இருக்கின்றனர்.
அதேசமயம், கற்ற கல்விக்கும், தனது தகுதிக்கும் ஏற்ற வேலையில்லாமல் கிடைத்த சிறு சிறு வேலைகளைச் செய்து வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத இக்கட்டான நிலையை எதிர்கொண்டு வருபவர்களும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் கொரியாவில் காணப்படும் வேலைவாய்ப்பிற்காக (Korean Job Recruitment) விண்ணப்பம் வெளியாகியுள்ளதால் இலங்கையர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.