அனுராதபுரத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் – பாதெனிய பிரதான வீதியின் ஆலங்குளம் பகுதியில் நேற்று (27-05-2023) இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில், 4 வயது குழந்தை மற்றும் 38 வயதான கார் சாரதி ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அனுராதபுரம் தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குருநாகல் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த காரின் சாரதி உறங்கியதால் கார் வீதியை விட்டு விலகி அனுராதபுரத்திலிருந்து குருநாகல் நோக்கி பயணித்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இரு கார்களில் சிக்கி காயமடைந்தவர்களை பிரதேசவாசிகள் மீட்டு அனுராதபுரதம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தற்போது அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸாரின் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



















