கொழும்பு – ராஜகிரிய பிரதேசத்தில் வீதி ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளனர்.
நேற்றைய தினம் (30-06-2023) மாலை 5 மணி முதல் 4 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை வெலிக்கடை பொலிஸ் பிரிவில் ராஜகிரிய வீதி, மதின்னாகொட சந்தி தற்காலிகமாக மூடப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுவதால், வெலிக்கடை சந்தி, மொரகஸ்முல்ல சந்தி மற்றும் ராஜகிரிய வீதியில் மதின்னாகொட சந்தி ஆகியவற்றிலிருந்து வீதி மூடப்படும்.
இதன் காரணமாக மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.