விமான நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் 187 ஆம் இலக்க சொகுசு பேருந்து சாரதிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பேருந்து நிலையத்தில் இருந்து சொகுசு பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபை தடை விதித்துள்ளமையால் பேருந்து உரிமையாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இப் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை நேற்று முதல் (26.08.2023)ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவலறியப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்க எதிர்பார்க்கும் பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றன.



















