திருகோணமலையில் உள்ள பிரபல மலர்சாலையின் வாகனம் மோதி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று புதன்கிழமை (20) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருமலை, நிலாவெளி பிரதான வீதியின் ஆனந்தபுரி பகுதியில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர்
வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர்மீது அவ்வீதியால் பயணித்த மலர்சாலை வாகனம் ஒன்று மோதியதில் வீதியில் பயணித்த அந் நபர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துச் சம்பவத்தில் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் பழனியாண்டி (வயது 78) என்ற நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.