இஸ்ரேல், ஹமாஸ் போர் கடந்த 07ஆம் திகதி ஆரம்பமானதிலிருந்து தொடர்ச்சியான தாக்குதலில் மேற்கொண்டு வருகின்றன.
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்தது. இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது.
பின்னர் இசை திருவிழாவின் போது நடாத்தப்பட்ட தாக்குதலின் போது 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
ஹமாஸ் அமைப்பு 210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இஸ்ரேல் தாக்குதலை அடுத்து காசாவின் தொலைதொடர்பு கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது.
எலான் மஸ்க் வெளியிட்டுள்ள கருத்து
இதனால், இணையதள சேவை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், காசா நகருக்கு செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை ஸ்டார் லிங்க் வழங்க இருக்கிறது. எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். ர
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரின்போது, இதேபோன்று இணையதள சேவையை மஸ்க் வழங்கினார். இதன்படி, காசாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச உதவி குழுக்களுக்கு இணையதள சேவையை வழங்க மஸ்க் முடிவு செய்திருக்கிறார்.
அமெரிக்காவின் பிரதிநிதியான அலெக்சாண்டிரியா ஆகேசியோ-கார்டெஜ் என்பவர் அறிக்கை ஒன்றில், 22 லட்சம் பேருக்கு அனைத்து வித தொலைதொடர்புகளையும் துண்டிப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என கூறினார்.
அவர் தனது பதிவில், பத்திரிகையாளர்கள், மருத்துவ அதிகாரிகள், மனிதநேய முயற்சிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பேராபத்தில் உள்ளனர். இதனை அமெரிக்கா கண்டிக்கிறது என தெரிவித்து உள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், மஸ்க் தன்னுடைய எக்ஸ் சமூக பதிவில், காசாவுக்கான ஸ்டார்லிங்க் இணையதள சேவையை வழங்கும் முடிவை வெளியிட்டுள்ளார்.
Cutting off all communication to a population of 2.2 million is unacceptable. Journalists, medical professionals, humanitarian efforts, and innocents are all endangered.
I do not know how such an act can be defended. The United States has historically denounced this practice. https://t.co/L9iV7TSs2u
— Alexandria Ocasio-Cortez (@AOC) October 27, 2023